பறவைகளைக் காணவென்று நாம் அங்கும் இங்கும் செல்லத் தேவையில்லை. நம் வீட்டுச் சன்னலில் , மொட்டை மாடியில் தெரியும் பறவைகளே பலவகை உண்டு. அவற்றைப் பார்த்து, அவற்றின் குரல் அடையாளம் காண்பது,வெவ்வேறு சமயத்தில் அவை வெவ்வேறு குரல் கொடுப்பதை இனங்காண்பது போன்றவை போன்பவை எல்லாம் நம் மன அழுத்தங்களுக்கும் மிக இதமாக இருக்கும்.(உதாரணமாக, பாம்பையோ, லகிடு போன்ற பறவைகளையோ கண்டால் தவிட்டுக் குருவியும் அணிலும் மாறி, மாறி ஒரு விதமான இரைச்சல் எழுப்பும்). பரபரப்பான நவீன வாழ்முறையில், தினம் ஒரு சில நிமிடங்கள் நாம் இயற்கையை ரசிக்க முயற்சித்தால் எவ்வளவோ நன்மை உண்டு.
மேலும் படிக்க...»
தினை புஞ்சைத் தவசங்களில் சிறப்பானது. மிகக் குறைந்த நீர்த் தேவையே உள்ள தினை, மானாவாரியில் , எல்லா நிலப் பரப்பிலும், எந்த வித செயற்கை உரமோ, பூச்சிக் கொல்லியோ தேவையின்றி மிக எளிதாக வளர்ந்து உழவனுக்கு உணவுப் பாதுகாப்பு அளிப்பது. தமிழரின் பாரம்பரிய உணவுகளில் சிறப்பான இடம் பிடித்துள்ளது. 'தினைத்தனை உள்ளதோர் பூவினிற் தேன் உண்ணாதே' என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் தினையின் நுண்ணிய தன்மையைக் குறிப்பிடுகிறார். மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது! தினையும் மிளகும் சேர்ந்த அடை செய்வது எப்படி என்று இவ்விதழில் காண்போம்.
மேலும் படிக்க... »
பார்வதி கொஞ்சம் பயந்து போயிருந்தாள், ரொம்பவே பயந்து போயிருந்தாள். பின்னே இருக்காதா, வாழ்க்கையில் முதல் முறையாக அவள் சிறை செல்ல இருப்பது உறுதியாகிவிட்டது. அவளும், அவள் மிகவும் மதிக்கும் லட்சுமி அக்காவும், உடன் வந்த மற்ற 4 பெண்கள் குழு தலைவிகளும், எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல், அந்த இரக்கமற்ற தாசில்தார், அவர்களை சிறையில் அடைக்க மிகவும் சாமர்த்தியமாக ஏற்பாடு செய்துவிட்டார். இவர்களை சிறையில் அடைக்க வந்த பெண் கான்ஸ்டபிளோ, “அவளே, இவளே” என்று இவர்கள் 6 பேரையும், வயது வித்தியாசம் பாராமல் திட்டிவிட்டு, இவர்களை சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல வண்டிக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.
மேலும் படிக்க... »