தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவும், உற்பத்தியும், ஊடகங்களும், உண்மையும் - பரிதி


அதிக விளைச்சல் தரவல்லது வேதி வேளாண்மையா, உயிர்ம வேளாண்மையா? அனைத்து உழவர்களும் உயிர்ம வேளாண்மைக்கு மாறினால் பஞ்சம் தலைவிரித்தாடுமா? உணவு உற்பத்தி குறித்த சில பெரிய பொய்களை மக்கள் உணராதிருப்பதற்கே இது போன்ற வினாக்களும் விவாதங்களும் பரப்பப்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. பசுமைப் புரட்சியின் அடிப்படையில் செய்யப்படும் ஆலைமயமான வேதி வேளாண்மையில் எடுக்கக்கூடிய விளைச்சலை உயிர்ம வேளாண்மையிலும் ஏறக்குறைய எட்ட முடியும் என்பதை அமெரிக்க ஒன்றிய மாநிலங்களில் ஒன்றான ஐயோவா-வில் ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர். கலிஃபோர்னியா-விலும் ஆய்வாளர்கள் அத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர். இவ்விரு ஆய்வுகளுமே பரவலான வரவேற்புப் பெற்றுள்ளன.

வேதி வேளாண்மை, உயிர்ம வேளாண்மை ஆகிய இரண்டில் எது அதிக விளைச்சல் தரும் என்பது போன்ற உரையாடல்களில் இடம்பெறுவதே மிக நுணுக்கமாகப் பரப்பப்பட்டுள்ள கண்ணி ஒன்றில் சிக்குவதற்கு ஒப்பாகும். இந்த ஆழமான, அடிப்படை உண்மையை அறியாதவரே மேற்படி ஆய்வு முடிவுகளால் உற்சாகமடைவர்!

'உலக மக்கள் அனைவருக்கும் போதுமான உணவைத் தங்களால் மட்டுமே உற்பத்தி செய்ய இயலும்' என்று அனைத்தையும் உள்ளடக்கிய ஒற்றைச் சிந்தனையைப் புகுத்தி அனைவரையும் நம்பச் செய்வதே ஆலைமயமான உணவு முறைமையில் பங்காற்றும் மான்சான்ட்டோ போன்ற பெருநிறுவனங்களின் முதன்மைச் செயலுத்தி. இதை வேறு கோணத்தில் பார்த்தால், 'வேளாண்-சூழலியல் வழிமுறைகள், சீரிய நெல் சாகுபடி, பகுதிசார் உத்திகள், குடும்ப அளவிலான சிறு குறு உழவர்களின் செயல்முறைகள், உயிர்ம வேளாண்மை, மரபீனி மாற்றப்பெற்ற விதைகளை ஒதுக்கும் வேளாண்மை போன்ற (ஆலைமயமாகாத) வேளாண் முறைமைகள் உலகுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யவே முடியாது' என்ற கருத்தைப் பரப்புவதுதான் அந்நிறுவனங்களின் குறிக்கோள்.

முழுக் கட்டுரை »

உலக வாணிபமும் உழவன் வாழ்வாதாரமும் - அனந்து


நம் இந்திய அரசு ஒவ்வொரு வருடமும் உழவர்களுக்காகப் பல்வேறு வடிவங்களில் பல கோடி ரூபாய் மானியங்களை அளிக்கிறது. எடுத்துக் காட்டாக உர மானியம் என்ற பெயரில் தேசிய அளவில் வருடம் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப் படுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பல ஆயிரம் கோடி ஒவ்வொரு மாநில அரசும் செலவிடுகிறது. இவை தவிர வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் என்று பேரிடர்களுக்கான செலவினங்கள். இவ்வளவு செய்தும் இந்திய உழவர்களில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில்தான் இருக்கிறார்கள். ஏனெனில் அதன் பின்னணியில் ஆழ்ந்த, நூதனமான‌ அரசியல் மற்றும் வாணிப சூழ்ச்சிகள் புரையோடி உள்ளன.

இது இப்படி இருக்க வலுத்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகள் தங்கள் உழவர்களின் வருவாய் பாதிக்காமல் இருக்க மிகப்பல சலுகைகள் அளிக்கின்றன. அங்கே உற்பத்தி அவர்களின் தேவைக்கும், நுகர்ச்சிக்கும் மீறி மிக அதிகமாக உள்ளது. கோதுமை, மக்காச்சோளம் போன்ற தானியங்கள் மிகவும் அதிக உற்பத்தியாகி அவற்றை எவ்வாறு விற்பது என்ற கவலையில் அந்நாட்டு அரசுகள் உள்ளன. பல மேலைநாடுகளில் “தரிசு மானியம்” என்று நிலத்தைத் தரிசாகப் போடுவதற்கு அரசு மானியம் வழங்குகிறது.எனவே உணவுத் தன்னிறைவு பெற்று விட்ட நம்நாட்டில், உழவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, உழவு ஒரு கட்டுப்படியாகாத தொழில் ஆக்கிவிட்டால் பின் உற்பத்தி குறைந்து மேலை நாட்டு விளைபொருட்களுக்கு நாம் ஒரு மிகப் பெரும் சந்தை ஆகி விடுவோம் என்ற குயுத்தியுடன், அவ்வரசுகள் நம் வேளாண் மானியங்களைக் குறிவைத்துப் பல காய்களை நகர்த்தி வருகின்றன. (இச்சூழ்ச்சியின் விளைவுகளை வேளாண்மையில் உள்ளோர் ஏற்கனவே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் மன்மோகன் சிங் விவசாயிகள் விவசாயத்தை விட்டுப் பெயர வேண்டும் என்றும், மோடி மேம்படுத்தல், மூளையுள்ள நகரங்கள் என்றும் முழங்கி வருகின்றனர்.)

முழுக் கட்டுரை »

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாத நாயகர் வரிசையில் நாம் சந்திக்கவிருக்கும் சுஜாதா மகேஷ் தம்பதியரிடம், அவரது பண்ணைக்கு செல்லும் வழியை அறிந்து கொண்டோம். சென்னையின் தற்போதைய நிலையை எண்ணியவாறே, சற்றே கனத்த மனதுடன், சென்னை தாம்பரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் புகைவண்டியில் பயணப் பட்டோம்.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள கண்டமங்கலம் ஊராட்சியில் உள்ள சின்ன பாபு சமுத்திரம் என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார்கள் சுஜாதா, மகேஷ் தம்பதியர்கள். இருவரும் சென்னைப் பெருநகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரது பெற்றோர்களுக்கும் வேளாண்மையோ, கிராமத்து வாழ்க்கையோ அறிமுகமற்றவை.

மகேஷ் பள்ளி பருவ‌முதலே ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தவர். அவர் சென்னையில் கல்லூரியல் கணிதவியல் பயிலும் போது விளையாட்டில் மேலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டு அளவில் தன்னை உயர்த்திக் கொள்ளலாமா அல்லது மேற்படிப்புப் பாதையைத் தொடரலாமா என்ற கேள்வி எழுந்தது. முடிவில் அவர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் மென்பொருளியலில் மேற்படிப்பு படித்து இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமொன்றில் பணியில் அமர்ந்தார். சில வருடங்களில் நிறுவனத்தில் தொழில் முறையில் பதவி உயர்வு, பொருளாதார வளர்ச்சி, வெளி நாடு செல்லும் வாய்ப்பு போன்ற வெளிநோக்கு விடயங்களில் முன்னேறினார். இவ்வாறான புற உயர்வுகள் அவருக்கு பெரிய மன நிறைவைத் தரவில்லை. மாறாக மென்பொருள் பணியின் அழுத்தமும், அப்பொய்யான வேகமும் அவரை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டின.

முழுக் கட்டுரை »

நாகையில் நம்மாழ்வாரின் நினைவேந்தல் - ஜெயக்குமார்


டெல்டா மாவட்ட வேளாண்மையை பாதுகாப்பதற்காக போராட்ட களத்தில் இன்னுயிர் நீர்த்த ஐயா. நம்மாழ்வாரின் நினைவேந்தல் மற்றும் இயற்கை உழவர்களின் ஒருங்கிணைப்பு மாநாடு, தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் தலைவர் , திரு. அ. அம்பலவாணன் அவர்களின் தலைமையில், சென்ற மாதம் டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள எலந்தங்குடி கிராமத்தில் நடை பெற்றது. இம்மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்ததன் பெருமை திரு. அல்லீஸ் பாக், திரு. கிரியேட் ஜெயராமன் ஆகியோரையே சேரும்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரையாற்றிய முனைவர் சுல்தான் இஸ்மாயில், ரெங்கநாதன், பாம‌யன், ஆர். ஜெயச்சந்திரன், நக்கீரன் போன்றவர்கள் விவசாயிகளுக்கு எளிதாய்ப் புரிகின்ற வகையில் பல கருத்துகளை மாநாட்டில் மேடையில் கூறினார்கள். சுல்தான் இஸ்மாயில் அவர்கள் மண்ணின் தன்மை,வயது,வாசனை போன்றவற்றையும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தைப்பற்றியும், அதன் பயன்களையும் பற்றியும் மிகத்தெளிவாக விளக்கினார்.

மண்ணின் வயதைப்பற்றி கூறும் போது பாறைகளுக்கு மட்டும் தான் வயது உண்டு எனவும், பாறையிலிருந்துதான் மண்வகைகள் உருவாவதாகவும், அந்த பாறை அமிலப்பாறை (acid rock) என்றால் அதிலிருந்து வரும் மண் அமிலத் தன்மை கொண்டதாகவும், (acidic soil), காரப் பாறை (alkaline rock) என்றால் அதிலிருந்து காரத்தன்மை (alkaline soil) உருவாகிறது எனக் கூறினார்.

முழுக் கட்டுரை »

உணவும், உற்பத்தியும், ஊடகங்களும், உண்மையும் - பரிதி


அதிக விளைச்சல் தரவல்லது வேதி வேளாண்மையா, உயிர்ம வேளாண்மையா? அனைத்து உழவர்களும் உயிர்ம வேளாண்மைக்கு மாறினால் பஞ்சம் தலைவிரித்தாடுமா? உணவு உற்பத்தி குறித்த சில பெரிய பொய்களை மக்கள் உணராதிருப்பதற்கே இது போன்ற வினாக்களும் விவாதங்களும் பரப்பப்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. பசுமைப் புரட்சியின் அடிப்படையில் செய்யப்படும் ஆலைமயமான வேதி வேளாண்மையில் எடுக்கக்கூடிய விளைச்சலை உயிர்ம வேளாண்மையிலும் ஏறக்குறைய எட்ட முடியும் என்பதை அமெரிக்க ஒன்றிய மாநிலங்களில் ஒன்றான ஐயோவா-வில் ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர். கலிஃபோர்னியா-விலும் ஆய்வாளர்கள் அத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர். இவ்விரு ஆய்வுகளுமே பரவலான வரவேற்புப் பெற்றுள்ளன.

வேதி வேளாண்மை, உயிர்ம வேளாண்மை ஆகிய இரண்டில் எது அதிக விளைச்சல் தரும் என்பது போன்ற உரையாடல்களில் இடம்பெறுவதே மிக நுணுக்கமாகப் பரப்பப்பட்டுள்ள கண்ணி ஒன்றில் சிக்குவதற்கு ஒப்பாகும். இந்த ஆழமான, அடிப்படை உண்மையை அறியாதவரே மேற்படி ஆய்வு முடிவுகளால் உற்சாகமடைவர்!

'உலக மக்கள் அனைவருக்கும் போதுமான உணவைத் தங்களால் மட்டுமே உற்பத்தி செய்ய இயலும்' என்று அனைத்தையும் உள்ளடக்கிய ஒற்றைச் சிந்தனையைப் புகுத்தி அனைவரையும் நம்பச் செய்வதே ஆலைமயமான உணவு முறைமையில் பங்காற்றும் மான்சான்ட்டோ போன்ற பெருநிறுவனங்களின் முதன்மைச் செயலுத்தி. இதை வேறு கோணத்தில் பார்த்தால், 'வேளாண்-சூழலியல் வழிமுறைகள், சீரிய நெல் சாகுபடி, பகுதிசார் உத்திகள், குடும்ப அளவிலான சிறு குறு உழவர்களின் செயல்முறைகள், உயிர்ம வேளாண்மை, மரபீனி மாற்றப்பெற்ற விதைகளை ஒதுக்கும் வேளாண்மை போன்ற (ஆலைமயமாகாத) வேளாண் முறைமைகள் உலகுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யவே முடியாது' என்ற கருத்தைப் பரப்புவதுதான் அந்நிறுவனங்களின் குறிக்கோள்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org