இஞ்சி சாகுபடியில் நிலத்தின் வளம்/நலம் பேணுவது மிக முக்கிய செயலாகும். நிலத்தில் அங்ககப் பொருட்களின் அளவு கூடுதலாக இருப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக கால்நடைக் கழிவுகளான தொழுஉரம் அல்லது ஆட்டுக்குப்பை அல்லது நன்கு தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் அல்லது மண்புழு உரம் நிலத்தில் கடைசி உழுவில் இட வேண்டும். கம்போஸ்ட் அல்லது தொழு உரமாக இருப்பின் ஏக்கர் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி இஞ்சி சாகுபடி துவங்குவதற்கு முன்பு 60 முதல் 70 நாட்களுக்கு முன்னர் பலவகை விதைகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 கிலோ விதைத்து 4 முதல் 5 அடி உயரம் நன்கு வளர்ந்த பயிர்களை மடித்து உழவு செய்வதன் மூலம் 25 முதல் 30 டன் தாவரக் கழிவு சேர்ப்பது நிலத்தின் பெளதிக தன்மை/இயற்பியல் தன்மை மிக சிறப்பாக உருவாகி விடும். ஆக அங்கக் பொருட்களின் அளவு எந்த அளவு கூடுதலாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு நிலத்தின் உயிர் இயக்கம் அதாவது நுண் உயிர்களின் இயக்கமும் அதிகரிக்கும். அங்ககப் பொருட்களின் அளவு கூடுவது நில வளம் எனவும், நுண்உயிர்களின் இயக்கம் அதிகரிப்பது நில நலம் பேணுதல் எனவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக நிலவளம், நில நலம் ஆகிய இரண்டும் மிக முக்கிய ஆதார செயல்கள் ஆகும். இது அனைத்து வகை சாகுபடி பயிர்களுக்கும் பொருந்தும்.
ஈரோடு மாவட்டம் கோபியிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 5 ஆவது கல் தொலைவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி மூலவாய்க்கால். இதை ஒட்டி சுமார் 4.1 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள உழவாண்மை பண்ணை திரு. விஜயபாஸ்கருக்கு சொந்தமானது. இந்தப்பண்ணை உழவாண்மை பண்ணையாக மாற்றமடைந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றது. திரு. விஜயபாஸ்கர் பாரம்பரிய விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்துவிட்டு நேரிடையாக தனது குடும்பத்துக்கு சொந்தமான பூமியில் விவசாயத்தில் ஈடுபட்டார். கோபி பகுதியில் பவானிசாகர் அணை நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர் ஆண்டு முழுவதும் கிடைப்பதால் இந்தப்பகுதியில் எப்போது பார்த்தாலும் பசுமையாக காணப்படும். கரும்பு, வாழை, மஞ்சள் மற்றும் மூன்று போகமும் நெல் போன்ற பயிர்கள் தொடர்ந்து பயிர் செய்யப்படுகிறது. பாஸ்கரும் தனது பூமியில் மஞ்சள், கரும்பு, வாழை போன்றவற்றை பயிர் செய்துவந்துள்ளார்.
ஒரு நிலத்தில் பயிரிடப்பட்டு, அதே நிலத்திலேயே மடக்கி உழுது எருவாக்கப்படும் பயிரைப் போலல்லாமல், பயிரிடப்படும் நிலத்திற்கு வெளி இடங்களில் வளர்ந்திருக்கும் பல்வேறு பயிர்களின் பசும் தழைகளை நிலத்திலிட்டு உழுது எருவாக்கும் முறைக்குப் பசுந்தழை எரு விடுதல் என்று பெயர்.
பூவரசு, வேம்பு, புங்கம், ஆவாரை, எருக்கு, வாதமடக்கி, கொளுஞ்சி போன்ற நம் நாட்டு பயிர்களின் தழைகளோடு, வெளி இடங்களிலிருந்து இங்கு கொண்டு வந்து தழைக்காகவே வளர்த்து விடப்பட்டுள்ள நெய்வேலிக் காட்டமாகி, கிளைரிசிடியா போன்ற பயிர்களின் தழைகளையும் பசுந்தழை எருவாகப் பயன்படுத்தலாம்.
எருக்களை என்ற பெயரே அந்தப் பயிரின் சிறப்பைத் தெரிவிக்கின்றது. விளக்கு எரிக்கப் பயன்படும் எண்ணெய் விளக்கெண்ணெய் என்ற பெயரால் அழைக்கப்பட்டதைப் போல தழை எரு இடுவதற்கென்றே சிறப்பான முறையில் பயன்பட்ட செடியை எருக்களை என்றே அழைத்தனர். இந்தப் பெயரே பசுந்தழை எருவிடுவதன் தொன்மையைக் குறிக்கும். பொதுவாக நெல் பயிரிடப்படும் வயலுக்குப் பயிர்களை அக்களர் நிலங்களில் இட்டு உழுதனர் நம் முன்னோர்.