தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடை இலாததோர் கூடு - ஜெய்சங்கர்


குளியலறை மற்றும் கழிவறைக்கு கூரையின் மட்டம் சிறிது குறைவாக இருந்தால் போதுமல்லவா. வழக்கமாக, சம தள கூரைகள் பத்து அடி உயரத்தில் இருக்கும். இங்குள்ள ஜாக் ஆர்ச் கூரையின் ஆரம்பம் ஒன்பதே கால் அடியில் உள்ளது. அதாவது, ஜாக் ஆர்ச் அமர்ந்திருக்கும் காங்கிரீட் சட்டத்தின் மேல் மட்டம் ஒன்பதே கால் அடி. அந்த சட்டம் அமர்ந்திருக்கும் சுவரின் உயரம் சுமார் எட்டரை அடி. மூன்று அடி அகலமுள்ள ஆர்ச்சின் நடுப்பகுதி ஒன்பது அங்குலம் பக்கவாட்டை விட உயரமாக இருக்கும். எனவே, ஆர்ச்சின் மையப் பகுதியில் கூரையின் உயரம் பத்து அடிக்கு மூன்று அங்குலம் குறைவாக இருக்கும். முன்பே பார்த்தது போல் ஆர்ச் முடிந்த பிறகு, இந்த ஒன்பதே முக்கால் அடிக்கு மேல் தான் செங்கல் ஜல்லி, சுண்ணாம்பு, மணல் கலவையில் கடுக்காய் தண்ணீர் சேர்த்து தளம் அமைத்தது. எனவே, மேல் மட்டத்தில் தளத்தின் உயரம் சுமார் பத்தே கால் அடி. குளியலறை மற்றும் கழிவறைக்கு கூரை சுமார் எட்டு அடி உயரம் இருந்தாலே போதும். அதன் கூரைக்கு இரண்டு தெரிவுகளை பார்த்தோம். அகலம் ஐந்து அடிக்குள் தான் இருக்கும் என்பதால் கண்டிக்கற்களைக் கொண்டே இரண்டு சுவர்களுக்கும் இடையில் ஆர்ச் போல் அமைக்கலாம் என்பது. இரண்டாவது, பொதுவாக அலமாரிகள் அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கடப்பா கற்களைக் கொண்டு சம கூரை அமைப்பது.

முழுக் கட்டுரை »

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - பரிதி


நோக்கம்: நிலவளத்தையும் சூழல் நலனையும் காக்கும் வண்ணம் வடிவமைக்கப்படும் வேளாண் முறை உலக மக்கள் அனைவருக்கும் சுவையான, சத்து மிக்க உணவை வழங்கவல்லது. மேலும், அது பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலையும் தரும். எனவே, அந்த வேளாண்மை உலகில் இப்போது நிலவும் பட்டினிக் கொடுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டு பெரும் இன்னல்களை ஒழிக்கும். ஆனால், இப்போது நடைமுறையிலுள்ள வேளாண் முறையோ வேறொரு நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டது: 'பொருளாதார வளர்ச்சி' என்ற போர்வையில் [ஒரு சிலருடைய] செல்வத்தைப் பெருக்குவதே அதன் நோக்கமாக உள்ளது.

இப்போதைய அவசரத் தேவை மேன்மேலும் வேளாண் அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் ஆகியன அன்று. மனித இனம் எதிர்கொண்டுள்ள பேரின்னல்களின் சரியான தோற்றுவாய் எது என்பதை உணர்வதும் அதைப் போக்குவதற்கேற்ப நம் செயல்பாடுகளை மாற்றியமைப்பதுந்தான் நாம் உடனடியாகச் செய்யவேண்டியன.

முடிவு: இப்போது உலகில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் போதுமான, சத்துள்ள உணவை உற்பத்தி செய்ய நம்மால் இயலும். அது மட்டுமன்றி, மாந்த இனம் உள்ளவரை பிறக்கப் போகிற அனைவருக்குமே இத்தகைய உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யமுடியும். அநேகமாக அதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளும் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவைதாம்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org