கேழ்வரகு குழி பணியாரம்
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு - ஒரு கோப்பை
- வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
- வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - 3
- கடுகு, உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்
- தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
- கறி வேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து மையாக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 முதல் 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழிப் பணியாரச் சட்டியைச் சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவைக் குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால். சுவையான கேழ்வரகு குழிப் பணியாரம் தயார்!
இந்தக் குழிப்பணியாரத்தை குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். மேலும் இது நார்ச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள சிற்றுண்டி. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஊட்டச்சத்து கொண்ட உணவு.