[திரு.பசுமை வெங்கிடாசலம் (9443545862) உழவை வெல்வது எப்படி என்ற தலைப்பில் இதுவரை தற்சார்பு வேளாண்மையின் அடிப்படைத் தத்துவங்களையும் கொள்கைகளையும் விளக்கி இருந்தார். சொல்வதோடு மட்டுமின்றி, பல வேளாண் பண்ணைகளை அக்கோட்பாடுகள் கொண்டு லாபகரமாகப் பொருள் ஈட்டுவதாக மாற்றியுள்ளார். அதில் ஒரு பண்ணையைப் பற்றிய விவரம் இக்கட்டுரையில் - ஆசிரியர் ]
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் முதுகுளம் கிராமத்தில் உள்ளது முதுகுளம் பண்ணை. இந்த பண்ணை திருச்சியில் வசிக்கும் தொழிலதிபர் திரு. ராமநாதன் என்பவருக்கு சொந்தமானது. இது கம்பெனியாக பதிவு செய்யப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது. 1990 இல் தரிசாக இருந்த பூமியை வாங்கி சமன் செய்து ஆழ்துளை கிணறு அமைத்து விவசாய பூமியாக மாற்றியுள்ளார். வாழை, மஞ்சள் போன்ற பயிர்கள் செய்யப்பட்டு பின் 1994 முதல் 1996 வரை அனைத்து பரப்பிலும் 25 அடி இடைவெளியில் 6500 தென்னை கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில் குட்டை-நெட்டை, நெட்டை-குட்டை, நெட்டை போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன. இன்று இவற்றின் வயது சுமார் 20 வருடங்கள்.
மண் உயிருள்ளது என்பதையும், மண்ணில் உயிரினங்களின் செயல்பாடுகள் பற்றியும், இயற்கையின் சில விதிகளைப் பற்றியும் பார்த்தோம். இவைகளை அடிப்படையாகக் கொண்டே மண் வளத்தை மேம்படுத்தும் நுட்படங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். சரியான மண் மேலாண்மை நுட்பங்களையும், நீர் மேலாண்மை மற்றும் பயிர் வளர்ப்பு முறைகளையும் இதன் அடிப்படையில் நாம் உருவாக்கிக் கொண்டால் மண் வளத்தை மேம்படுத்த முடியும்.
கரிம அளவைக் கூட்டுவது
மண் மேலாண்மை நுட்பத்தின் முதல் அடிப்படை மண்ணின் கரிமச் சத்தை அதிகரிப்பதே. மண்ணில் உள்ள கரிமப் பொருளின் அளவே மண்ணின் வளத்தைத் தீர்மானிக்கின்றது. கரிமப் பொருள் அதிகரிக்கப்பட்ட மண்ணில் அனைத்து வகை நுண்ணுயிர்ப் பெருக்கமும், மண்வாழ் உயிரினங்களின் செயல்திறனும் அதிகரிக்கின்றது. பயிர் வளர்ச்சிக்கும், நலத்திற்கும் தேவையான அனைத்துப் பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் பயிருக்கு இயல்பான முறையிலும், சிறப்பான நிலையிலும், தேவையான அளவிலும் தொடர்ந்து கிடைக்கின்றன. மண் துகள் அமைப்பு சீர்பட்டு மண் பொலபொலப்பாகின்றது. எனவே, காற்றோட்டமும், நீர்ப்பிடிப்புத் திறனும் அதிகரிக்கின்றது. கரிம அளவு கூடும் பொழுது மண்ணின் கார அமில நிலை (PH) மேம்படுகின்றது. பயிர்களுக்கு மிக இன்றியமையாத வேர்ப்பூசண உறவு நிலை (மைக்கோரைசா) ஏற்படுகின்றது.
கரிமச் சத்தை மண்ணிலே அதிகப்படுத்துவதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.