[வருவாய்க்காகப் பணப் பயிர்களைத் தேடி உயர் விளைச்சல் என்று ஏய்க்கப்படும் விதைகள் மற்றும் புதிய தொழில்நுட்ப மாதிரிகளில் பணத்தைச் செலவு செய்யும் உழவன் பெரும்பாலான நேரம் கடனில் சிக்கி அப் பணப்பயிர்களே அவனுக்கு ருணப்பயிராய் (ருணம் = கடன்) மாறி பெரும் ரணப்பயிராகி விடுகிறது - சில சமயங்களில் கடன் சுமை தாங்காது தற்கொலைக்குத் தள்ளிப் பணப்பயிர்கள் பிணப்பயிர்களாகவும் கோர தாண்டவம் ஆடிவிடுகின்றன. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்களான கிச்சடி சம்பா, சீரக சம்பா, மாப்பிள்ளைச் சம்பா போன்றவற்றை இயற்கை முறையில் குறைந்த இடுபொருட் செலவில் சாகுபடி செய்து அவற்றை நல்ல விலைக்கு இயற்கை அங்காடிகளுக்கு விற்பனையும் செய்தால் உணவுக்கும், மண்ணிற்கும், நிலத்தடி நீருக்கும் பாதுகாப்பு அளிப்பது மட்டுமன்றி உழவனின் நிரந்தர வருவாய்க்கும் ஒரு உத்தரவாதம் கிடைக்கிறது. இது வெறும் மேடைப் பேச்சோ, கட்டுக்கதையோ அல்ல - நடைமுறை நிதர்சனம்.
பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே என்று தாளாண்மை தொடர்ந்து கூறி வருகிறது. இவ்வாறு செய்யும் உழவர்களைப் பேட்டி கண்டு செய்தி வெளியிட்டும் வருகிறது. உழவு என்பது வெற்றிகரமான தொழிலாக வேண்டுமெனில், உழவில் உற்பத்தி மட்டுமன்றித் திட்டமிடல், நிதி நிர்வாகம், இடர் நிர்வாகம், சந்தைப் படுத்துதல், வரவு-செலவு நிர்வாகம் போன்ற அனைத்துக் கூறுகளும் அடங்கும். இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான புரிதல் உழவனுக்கு ஏற்பட வேண்டும். இவை அனைத்தையும் உழவன் தனி ஒருவனாகச் செய்வது இயலாத செயல். எனவே இயற்கை வேளாண்மை வெற்றி பெற ஒவ்வொரு ஊரிலும் இயற்கை வேளாண்மை செய்ய விழையும் உழவர்கள் ஒரு குழுவாகக் கூடித் தங்கள் விளைபொருட்களைத் தாங்களே அங்காடிகளுக்கு விற்பனை செய்யும் அமைப்புக்களை உருவாக்க வேண்டும். இது ஒன்றுதான் உழவன் விடுதலைக்கு நிரந்தரத் தீர்வு.
இதற்கென நபார்டு போன்ற வங்கிகளிலேயே பல திட்டங்கள் உள்ளன. இப்போது வேளாண்மையும், கிராமிய வாழ்வாதாரங்களும், கிராமங்களும் தழைக்க மிக மிகத் தேவையானது, கிராமங்களை வழிநடத்திச் செல்லச் சுயநலம் இல்லாத, சேவை மனப்பான்மை கொண்ட, விவரம் அறிந்த நல்லவர்களே. இத்தொடரில் இவ்விதழில் நம் நிருபர் ஜெயக்குமாரின் சம்பா சாகுபடி அனுபவங்களை வெளிடியிடுகிறோம். - ஆசிரியர் ]
1990 ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் நியோநிகோடினாய்ட் என்கிற வகையை சேர்ந்த பூச்சிக்கொல்லிகள் பன்னாட்டு நிறுவனங்களான மொன்சொண்டோ, பேயர் போன்றவைகளால் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
விதைகளை இந்த பூச்சிக்கொல்லிகளில் நனைத்து விதைத்தால் பூச்சி தாக்குதல் பெருமளவு குறைந்துவிடும் (கடுகு விதைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும் பல்வேறு தானியங்களின் விதிகளுக்கும் பொருந்தும்) என உலகம் முழுவதும் உள்ள விவசாயிகள் நம்பவைக்கப்பட்டனர் இந்த நிறுவனங்களால்.
ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆகியும் இவற்றின் சுயரூபம் ஒரு புதிர் மெல்ல மெல்ல கட்டவிழ்வது போல தம் கோரமுகத்தின் பல பரிமாணங்களை இப்போதுதான் வெளிப்படுத்தத்தொடங்கியுள்ளது. இந்த நியோநிகோடினாய்ட்பற்றிய புரிதல் எவ்வளவு அவசரமான ஒன்று என்பதை இந்தக்கட்டுரையை படிக்கும்பொழுதே படிப்படியாக உணரத்தொடங்குவீர்கள்.
இந்த பூச்சிக்கொல்லி வெறும் பூச்சிக்கொல்லி மட்டுமல்ல இது ஒரு உயிர்க்கொல்லியும்கூட என்பதை அறியாத அப்பாவி விவசாயிகள் செய்ததெல்லாம் தம் தானிய விதைகளை இந்த வேதிக்கரைசலில் முக்கி எடுத்து விதைத்தது மட்டுமே. 25 ஆண்டுகள் கழித்து அவற்றின் பாதிப்புகளாக இது வரை கண்டறியப்பட்டிருப்பவற்றில் சில புள்ளிகளை மட்டும் இங்கே காண்போம்.
இம்மாத நாயகர்களைச் சந்திக்க நாம் மதுராந்தகம் செல்லும் பேருந்தில் பயணப் பட்டுக் கொண்டிருக்கையில், உடன் வந்த நண்பர் நம் தொடரில் நாம் போதுமான அளவுக்கு பொருளாதார விவரங்களைக் கொடுப்பதில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். நாம் நம் தொடரில் இது பற்றி உண்மையில் சிறிதளவும் கவனம் செலுத்தவில்லை என்பதை ஒத்துக் கொண்டோம். சில வாசக அன்பர்களும் இது பற்றி நம்மிடம் உரையாடியுள்ளனர் என்று அவருக்குத் தெரிவு படுத்தினோம். எனினும் நம் தொடரின் நோக்கமே வழக்கமான காசு, சொத்து போன்ற விடயங்களைக் கடந்தது.
நாம் கண்டு வரும் நாயகர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு இவ்வெண்ணங்களில் இருந்து விடுபட்டு, வாய்ப்புகள் இருந்த போதிலும் புறப் பொருள் தேடலை ஒதுக்கி, தேவைகளுக்கும் ஆசைக்கும் உள்ள பாகுபாட்டை ஆய்ந்து உணர்ந்து, மகிழ்ச்சியான வாழ்வுக்கு இயற்கை வாழ்வே சிறந்த வழியென்று முடிவெடுத்தவர்கள். சுற்றுச்சூழலினைப் பேணுவதில் ஒரு தனி மனிதனின் பங்கு பெருமளவு உள்ளது என்று முழுமையாய் நம்புபவர்கள். இத்தொடரில் நம் பணி அதையொட்டியே இருக்க வேண்டுமென்ற நம் அவாவை அவருக்குக் கூறினோம். மதுராந்தகத்தில் இறங்கி, இம்மாத நாயகர் திரு. சிரீராம் அவர்களை அலைபேசியில் அழைத்தோம். அவர் அச்சமயத்தில் அவர்களது கிராமத்துக்கு வர பேருந்து இல்லையென்றும், அருகில் உள்ள தானிகள் (ஆட்டோ) நிறுத்தத்தில், இராமு என்னும் நண்பர் இருப்பார் அவருக்கு தம் பண்ணைக்கு வழி தெரியும் என்றும் பதிலுரைத்தார். நாம் தேடுமுன்னரே, இராமு அவர்கள் தானியுடன் நம் அருகில் வந்து, “செல்வோம் வாருங்கள், கற்பகம் அவர்களின் விருந்தினர் தானே” என்று நம்மை வண்டியில் ஏற்றிக் கொண்டார். மதுராந்தகத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜமீன் எண்டத்தூர் கிராமத்தில் வசிக்கிறார்கள் சிரீராம் கற்பகம் தம்பதியினர்.