தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே - ஜெயக்குமார்


சென்ற ஆண்டு (2013 சம்பா) நம் பரிந்துரையை ஏற்று நண்பர் ஜெயக்குமார் 3 ஏக்கரில் பாரம்பரிய ரகமான கிச்சடிச் சம்பாவைப் பயிரிட்டார். மற்றுமுள்ள 13 ஏக்கர் நிலத்தில் செயற்கை விவசாயத்தில் ADT44 என்ற ஒட்டுரகத்தை நடவு செய்தார். அதைப் பற்றிய வரவு செலவு விவரங்களை நாம் சென்ற வருட பங்குனி இதழில் வெளியிட்டிருந்தோம். ( March 2014; வலைப்பூவில் : http://tmo.kaani.org/panguni2014/5.html ). கிச்சடி சம்பாவில் ஏக்கருக்கு 29500 நிகர லாபமும், ஒட்டு ரகத்தில் ஏக்கருக்கு 14060 நிகர லாபமும் கிடைத்தது. இதை நேரடியாக அனுபவித்து உணர்ந்தபின் ஜெயக்குமார் தன் மொத்தப் பண்ணையையும் இந்த ஆண்டு இயற்கை வேளாண்மைக்கு மாற்றி விட்டார்! இந்த ஆண்டு அவரது விளைச்சல் அனுபவங்களை வெளியிடுகிறோம். அவர் குறுவையே நடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.ஜெயக்குமாரைத் தொடர்பு கொள்ள : 9962009302]

நான் எனது நஞ்சை நிலத்தில் இயற்கை முறையில் கிச்சலி சம்பா என்ற பாரம்பரிய நெல் ரகத்தை தேர்வு செய்து சாகுபடி செய்துள்ளது தாளாண்மை வாசகர்கள் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் இந்த வருடம் (2014 சம்பா) சம்பா பருவத்தில் என்னுடைய 16 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்த அனுபவத்தை பார்க்கலாம்.

முழுக் கட்டுரை »

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


இந்தப்பண்ணை 15 வருடங்களாக உழவு செய்யப்படாமல் பயிர் செய்யப்படுகிறது. தவிர்க்கப்பட்டது உழவு மட்டுமல்ல, வெளியில் இருந்து கொண்டுவரப்படும் இடுபபொருட்களும்தான். இந்தப்பண்ணைக்குள் செல்வது விதைகள் மற்றும் நாற்றுக்கள் மட்டுமே. 1999 இல் நம்மாழ்வாரின் சந்திப்புக்குப்பின் இந்தப்பண்ணையை சுயசார்புப்பண்ணையாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. அதுவரை இந்தப்பண்ணை மற்ற பண்ணைகளைப்போல் ஓரினப்பயிர் சாகுபடி நிலமாக இருந்து வந்தது. அதனால் வருவாய் மிகவும் குறைந்து நஷ்டம் அடைந்து வந்தது. மிளகாய், நிலக்கடலை, பருத்தி, கரும்பு போன்ற பயிர்களில் ஏதாவது ஒன்று மட்டும் பயிர் செய்யப்பட்டது. இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டது. மகசூல் மிகவும் குறைந்து ஒரு கட்டத்தில் இந்த பூமி தரிசாக விடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் நீர்மட்டம் மிகவும் குறைந்தது ஆகும்.

நம்மாழ்வாரின் சந்திப்புக்குப்பின் இந்தப்பண்ணையில் அவரின் கொள்கைப்படி சுய தேவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன்படி பண்ணையை சார்ந்திருக்கும் கால்நடைகளின் உணவுத்தேவையான பசுந்தீவனம், உலர்தீவனத்திற்கு ஒரு அரை ஏக்கர் ஒதுக்கப்பட்டது. அதில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய கினியா புல் பயிர் செய்யப்பட்டது. அதில் மேல்மட்ட அடுக்குப்பயிராக வேலிமசால், மல்பெரி, கல்யாண முருங்கை, கிளரிசிடியா, சூபாபுல், முருங்கை போன்ற வெட்ட வெட்ட துளிர்க்கக்கூடிய மரவகைகள் நடப்பட்டன. இந்த பூமியின் ஒரு ஓரம் முள் இல்லா மூங்கில் 15 தூர்கள் நடப்பட்டன. மற்ற ஓரங்களில் தென்னை, மலைவேம்பு மற்றும் தடுசு போன்ற தடிமரங்கள் நடவு செய்யப்பட்டன. ஆங்காங்கே பழ மரங்கள் முந்திரி, கொய்யா, மாதுளை, மா, இலந்தை போன்றவைகள் நடப்பட்டன.

முழுக் கட்டுரை »

நிகழ்வுகள்


சூழல் மாசு காரணமாக விளைச்சல் பாதியாகிறது!

காற்றில் புகை, துகள்கள் உள்ளிட்ட மாசுகள் அதிகரிப்பதால் இந்தியாவில் உணவு தானிய விளைச்சல் எதிர்பார்க்கப்பட்டதில் பாதியளவுதான் இருக்கும் என்று அண்மைக்கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 1980 முதல் 2010 வரையான தரவுகளை வைத்து உருவாக்கப்பட்ட புள்ளியியல் மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கோதுமை விளைச்சல் 2010-இல் எதிர்பார்த்ததைவிடப் பாதியளவு குறைந்துள்ளது. கரி உள்ளிட்ட மாசுகள் நிறைந்த புகை மேற்படி வீழ்ச்சியில் தொண்ணூறு விழுக்காட்டுக்குக் காரணம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல், பருவகாலங்கள் மாறுதல் ஆகியன மீதமுள்ள பத்து விழுக்காட்டுக்குக் காரணங்களாகத் தெரிகிறது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்தது. ஆனால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்படவில்லை! உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட், பிகார், சார்க்கண்ட், மேற்கு வங்கம் முதலிய மாநிலங்களில் நெல் விளைச்சல் பதினைந்து விழுக்காடு அல்லது அதைக் காட்டிலும் அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது. போக்குவரத்து, மின்னுற்பத்தி உள்ளிட்ட துறைகள் வெளியிடும் மாசுகளைக் குறைத்தல், ஊர்ப்புற மக்களுக்கு அதிக செயல்திறன் கொண்ட அடுப்புகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மாசுபடுதலைக் குறைக்கும்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org