கடந்த 2011ம் வருடம் கல்வராயன் மலையில், கடற்பரப்பில் இருந்து 2500 அடி உயரத்தில், நானும் எனது நண்பர்களும் ஒரு விவசாய நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறோம். நான் அது வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமவெளியில்தான் பயிர் செய்து அனுபவம். எனவே, மலைப்பகுதியில் செய்யும் சாகுபடி மிகவும் புதிய அனுபவமாக இருந்து வருகிறது. சாலை வசதிகள் ஏற்பட்ட பிறகு பெரும்பாலானோர் இம்மலையிலும் ஒரு வருடத்து பணப்பயிரான குச்சி கிழங்கை (மரவள்ளி) மானவாரி நிலங்களில் பயிரிட தொடங்கி பன்மயத்தை அழித்து வருகின்றனர். நாங்கள் இங்கு விளைந்து வந்த பாரம்பரிய பயிர்களான சாமை, வரகு, தினை முதலியவற்றை பயிர் செய்யலாம் என்று முடிவு செய்து இந்த வருடம் அவற்றோடு குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களையும் மானவாரியில் பயிர் செய்தோம். இவற்றுள் வரகு சாகுபடி மிகவும் அரிதாகி வருகிறது.
- 01. தலையங்கம்
- 02. அக்கரை பார்வை - அனந்து
- 03. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ராம்கி
- 04. அருகி வரும் வரகு சாகுபடி - ஜெய்சங்கர்
- 05. விசும்பின் துளி - பாமயன்
- 06. தற்சார்பு வாழ்வியல் - புரிதலும் புரட்சியும் - சாட்சி
- 07. செவிக்குணவு இல்லாத போழ்து - ஸ்ரீ
- 08. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி
- 09. குமரப்பாவிடம் கேட்போம்
- 10. பீடையிலாததோர் கூடு - உழவன் பாலா
- 11. ரீஸ்டோர் என்னும் ஐந்தாண்டுக் குழந்தை - அனந்து
- 12. நிரம்பிய நூல்-வழிப்போக்கன்
- 13. சிறுகதை: சந்தை - பாமதிமைந்தன்