தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அருகி வரும்வரகு சாகுபடி - ஜெய்சங்கர்

கடந்த 2011ம் வருடம் கல்வராயன் மலையில், கடற்பரப்பில் இருந்து 2500 அடி உயரத்தில், நானும் எனது நண்பர்களும் ஒரு விவசாய நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறோம். நான் அது வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமவெளியில்தான் பயிர் செய்து அனுபவம். எனவே, மலைப்பகுதியில் செய்யும் சாகுபடி மிகவும் புதிய அனுபவமாக இருந்து வருகிறது. சாலை வசதிகள் ஏற்பட்ட பிறகு பெரும்பாலானோர் இம்மலையிலும் ஒரு வருடத்து பணப்பயிரான குச்சி கிழங்கை (மரவள்ளி) மானவாரி நிலங்களில் பயிரிட தொடங்கி பன்மயத்தை அழித்து வருகின்றனர். நாங்கள் இங்கு விளைந்து வந்த பாரம்பரிய பயிர்களான சாமை, வரகு, தினை முதலியவற்றை பயிர் செய்யலாம் என்று முடிவு செய்து இந்த வருடம் அவற்றோடு குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களையும் மானவாரியில் பயிர் செய்தோம். இவற்றுள் வரகு சாகுபடி மிகவும் அரிதாகி வருகிறது.

முழுக் கட்டுரை »

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ராம்கி

ஆண்டுதோறும் உலகில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களில் முப்பது முதல் ஐம்பது விழுக்காடு (அதாவது, ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு முதல் பாதி வரை) யாருக்கும் பயன்படாமல் வீணாகிறது! சந்தைப்படுத்தும் பெருநிறுவனங்கள் அப்பொருள்களின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி ஏற்றுக்கொள்ள மறுத்தல், நுகர்வோர் தம் இல்லங்களில் உணவை வீணாக்குதல் ஆகிய இரண்டும் இதற்கு முதன்மைக் காரணிகள். ஒன்றிய அரசியத்தின் இயந்திரவியல் பொறியாளர் கழகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க...»
 

அக்கரை பார்வை

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அனந்து

சந்தை என்பது முதலில் நம்மை சுற்றி உள்ள அண்மை நுகர்வோரே என்றும் குழுக்களாக இயங்குவதால் உண்டாகும் நன்மையையும் பார்த்தோம். ஆனால் அதற்கெல்லாம் முன்னர் தற்சார்பு என்பது உழவன் தனக்கு வேண்டியவற்றை தானே உற்பத்தி செய்வதில்தான் உள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பெல்காம் போன்ற பெரிய நகரங்களில் தான் இது போன்ற கூட்டுமுயற்சி வெல்லுமா என்று கேட்டனர் சிலர். இதை போல் பெரிய அளவில் முதலீட்டுடன் மதிப்பு கூட்டுதல் செய்தால் மட்டுமே சரியாக நடக்குமா என்றும் கேட்டனர். பெல்காம் பெரிய நகரமும் இல்லை, இந்த குழு துவக்கத்தில் பெரும் பணம் போடவும் இல்லை. பின்னர் வெல்ல ஆலைக்குத்தான் எல்லோரும் முதலீடு செய்து அமைத்தனர். இந்த சந்தையின் பெரும்பான்மையான நுகர்வோர் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள மக்கள் என்பதே சிறப்பு.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
s
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org