சாமை ஆப்பம்
தேவையான பொருட்கள்
1. சாமை அரிசி - 2 ஆழாக்கு (ஒரு ஆழாக்கு = 200 கிராம்)
2. இட்லி அரிசி - 2 ஆழாக்கு
3. உளுந்து பருப்பு - 1/2 ஆழாக்கு
4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. பெரிய தேங்காய் - ஒரு மூடி
7. செக்கு நல்லெண்ணை - தேவைக்கேற்ப
செய்முறை
ஆப்பம் சுடுவதற்குச் சுமார் 9 மணி நேரம் முன்பு சாமை, அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின் அரவை இயந்திரத்தில் இவற்றை ஆப்ப மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
இம் மாவில் தேங்காயைப் பூவாகத் துருவிப் போட்டு 6 மணிநேரம் புளிக்க விட வேண்டும்.
ஆப்பச் சட்டியில் ஒரு புறம் தீயில் வேக விட்டு, மறு புறம் ஆவியால் வேகும்படி மூடி வார்த்துப் பொன்னிறமாக எடுக்கவும்.
தேங்காய்ப்பாலுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.