கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஜமீன் காளியாபுரம் வழி, உனல்பதி வழியாக கேரள மாநிலத்திற்குள் செல்லும் வழியில் 2 ஆவது மைல்கல்லில் தார் சாலையை ஒட்டி அமைந்துள்ளது 'பொன் விளையும் பூமி'. இதன் மொத்தப்பரப்பளவு 50 ஏக்கர். இது 15 நபர்களுக்கு சொந்தமானது. அனைவரும் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்ப்பவர்கள். வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்து வந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் அறிமுகமாகி நண்பர்களானவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பூமி வாங்கி விவசாயத்தில் ஈடுபட முயற்சி செய்துவந்தனர். இந்த காலகட்டத்தில் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் நிலம் வாங்க ஏற்பாடு செய்து இன்று வரை இணைந்து செயல்பட்டுவருபவர் கோவையை சேர்ந்த திரு. ஆனந்த் அவர்கள் (இவரும் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்த்து இன்று இயற்கை வாழ்வியல், தற்சார்பு விவசாயம் போன்ற எதிகால வாழ்வியலுக்கு உண்டான பயிற்சிகளை விரும்பி வருபவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுள்ளார்).
இவர்கள் அனைவரது எண்ணமும் தங்களுக்கு சொந்தமான பூமியில் தங்கி தங்கள் குடும்பத்திற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்து கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது ஆகும். தங்களது குடும்பம் ஆரோக்கியமான சூழலில் வாழும் வாய்ப்பும், நஞ்சில்லாத உணவும், ஆரோக்கிய வாழ்வும் இங்கு கிடைக்கும் என்று விரும்பினர். அவர்கள் அனைவரும் 28 இலிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களை சார்ந்து பெரியவர்களும் குழந்தைகளும் உள்ளனர்.
(இது காலின் டட்சு எனும் உயிரியலாளர் 2005-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றின் சுருக்கப்பட்ட தமிழாக்கம். இது இரண்டாம் பகுதி. அவருடைய இணையதள முகவரியும் ஆங்கில மூலக் கட்டுரைக்கான சுட்டியும் இந்தத் தமிழாக்கத்தின் இறுதியில் உள்ளன.கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. - பரிதி (thiru.ramakrishnan@gmail.com), மொழிபெயர்ப்பாளர் )
செய்யவேண்டியவற்றை நாம் ஏன் செய்வதில்லை?
செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும். [குறள் 466]
தற்கால உலகம் மேற்கத்திய வல்லரசுகள், பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள், அனைத்துவகை வல்லுநர்கள் ஆகியோரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டுள்ளது. (மேற்கத்திய வல்லரசுகள் பெரும்பாலும் அரசியலையே தம் முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்களின் கைகளில் உள்ளன.) பருண்மையான அதிகாரத்தையும் ஆற்றலையும் தம்மிடம் வைத்துக்கொண்டுள்ள இவர்கள்தாம் உலகை இப்போது வாட்டும் அனைத்து இன்னல்களுக்கும் பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில், பொறுப்புணர்வற்ற அதிகாரம் இருக்கலாகாது.
சென்ற இதழில் உலகின் மிகப் பெரிய இயற்கை உழவர் சங்கமாக நடந்தேறிய மாநாட்டைப் பற்றி எழுதியிருந்தோம். இந்த மாநாட்டில் கூடிய இயற்கை விவசாயிகளால் இயற்றப்பட்ட இயற்கை விவசாயிகள் சமூகத்தின் தீர்மானம்:
'சந்தைப் படுத்தவும் பல திட்டங்கள் நிறைவேற்றுவோம். அதற்காகவே ” ஹரியானா ஃப்ரெஷ்” (Haryana Fresh) என்கிற வர்த்தக அமைப்பிற்குப் பெயரையும் பதிவு செய்துள்ளோம் ' என்றார். இது மட்டுமல்லாமல் பாரம்பரிய விவசாயத்தையும், பாரம்பரிய பயிர்களையும், பன்மையத்தையும் மீட்டெடுப்போம் என்றார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் மேனகா காந்தி அவர்கள் பூச்சிகொல்லிகளையும் அதன் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் உடல் மற்றும் சூழல் கேடினையும் எடுத்துரைத்து அவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றார். மரபீனி மாற்றப்பட்ட விதைகளையும் (உணவையும்) நாம் அறவே தவிர்க்க வேண்டும் என்றார் (அவர் பங்கு பெறும் மோடி அரசு இவ்வளவு தீவிரமாக மரபீனி விதைக் கம்பனிகளுக்குச் சாமரம் வீசும் பொழுதும் அவர் இதனைக் கூறியது அங்குக் கூடியிருந்த விவசாயிகளுக்குப் பெரிய ஆறுதலை அளித்தது.)