இப்போது அரசியல் தொடங்கி அனைத்திலும் மேம்படுத்துதல், அந்நிய முதலீடு, பொருளாதார வளர்ச்சி, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்று பற்பல பெயர்களில் தொழில் வளர்ச்சியைத் தேடுகிறோம். நாகரிக வாழ்விற்குத் தொழில் என்பது மிக இன்றியமையாதது; இதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை. நிறையத் தொழில் வளர்ந்தால் நிறையப் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்; வறுமை ஒழியும். இதுவும் மிகச் சரியான ஒரு எதிர்பார்ப்பே. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தாராளமயமாக்கல், உலக மயமாக்கல் என்ற பெயரில் நம் நாட்டுச் சந்தையை அந்நிய முதலீடுகளுக்குத் திறந்து விட்டுள்ளோம் ; ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்துள்ளது - ஆனால் வறுமை ஒழியவே இல்லையே. அதிகமாக அல்லவோ ஆகி விட்டது? எங்கோ இடிக்கிறதே? இதில் எங்கே கோட்டை விட்டோம்?
மேலும் படிக்க...»
வளமா வளர்ச்சியா?
ஒரு வழியாகத் தமிழகத்தில் தேர்தல் ஆரவாரங்கள் அடங்கி மக்கள் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பி விட்டனர். தேசிய அளவில் இன்னும் மேடைக் கூச்சல்களும், பொய்யும், புரட்டும், பிரிவினை வாதங்களும், ஒருவர்மேல் ஒருவர் சேற்றை வாரித் தூற்றிக்கொள்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இதைவிடக் கீழே போக முடியாது என்ற நாம் நினைப்பதற்குள் ஆசாம்கான், கிரிராஜ் சிங், ராம்தேவ் போன்றவர்கள் புதிய, புதிய பாதாளங்களை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்! யாரும் நாட்டைப் பற்றியோ, அதன் குடிமக்களான நம்மைப் பற்றியோ சிந்திப்பதாகத் தெரிவதில்லை. வளர்ச்சி, வளர்ச்சி என்று காங்கிரஸும், பி.ஜே.பியும் மாறி மாறி முழக்கிக் கொண்டிருக்கையில், கடந்த 20 வருடங்களில் ஏழைகளின் வாழ்க்கைத் திறன் மேம்பட்டிருக்கிறதா என்று கேட்போர் யாரும் இல்லை.
முழுக் கட்டுரை »