தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நிரம்பிய நூல் - ராம்


குருஜீ என்று அவரை தெரிந்தவர்கள் பலரால் மரியாதயுடன் அழைக்கப்படும், திரு. ரவீந்தர சர்மா, ஒரு ஆன்மீக நெறியையோ அல்லது மடத்தையோ சார்ந்தவ‌ர் அல்ல. அவர் முப்பது காலமாக இன்றைய தெலுங்கானா மாநிலத்தின் ஒரு முக்கியமான ஊராக விளங்கும், அதிலாபாதில், அதைச் சுற்றியுள்ள பழங்குடியினர் சமூகத்தினுடன் வாழ்ந்தும், அவர்களிடமிருந்து கற்றும், தான் கற்றவற்றைப் பிறரிடம் பகிர்ந்தும் வருகிறார். வருடம் முழுவதும் பல கலைகளைச் செய்துவரும், திரு. சர்மா, வருடத்தின் வெவ்வேறு காலங்களில், மண்ணையும், கல்லையும், உலோகத்தையும் மரத்தையும் கொண்டு கலைநயம் மிக்க பொருட்களைத் தன் கைகளினால் படைத்து வருகின்றார். இவர் படிக்கும் காலத்திலிருந்தே தம்மைச் சுற்றியுள்ள இதர சமூகத்தினருடன் பழகியும், அவர்களிடம் இருந்து பல கலைகளைக் கற்றும் வந்தார். முதுகலைப் பட்டம் படிக்க போபாலில் உள்ள பல்கலைகழகத்திற்க்கு இவர் சென்றபோது, அங்குள்ள பேராசிரியர்களைவிட இவருக்கு அதிகம் தெரிந்திருந்ததால், இவரை ஒரு ஆசிரியராகவே அந்தக் கல்லூரி நடத்தியது. சிறிது காலத்திற்க்குப் பின் கல்லூரி வாழ்க்கை தமக்கு ஒத்துவராது என்று விட்டு விலகிய‌ திரு. சர்மா, தமது அடுத்த 30 வருடங்களில் பெரும்பாலும், “பாண்டு” (காற்சட்டை) அணிந்தவர்களின் சகவாசத்தையும், பேசுவதையுமே தவிர்த்து,

முழுக் கட்டுரை »

வேகும் புவியும் சாகும் உயிரிகளும் - பரிதி

சென்ற மாத இறுதியில் உலக மக்கள் அனைவருக்கும் மிக, மிக முதன்மை வாய்ந்த அறிக்கைத் தொகுப்பு ஒன்று வெளியாயிற்று. சூழல் மாற்றம் குறித்த அரசிடை ஆயம் எனும் உலகளவிலான அறிஞர் குழுவின் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைத் தொகுப்பு (மஅ5) அது.

சூழல் மாசு குறித்த அறிவியல், அதன் விளைவுகள், அவற்றைக் கட்டுப்படுத்துதல் ஆகியன அவ்வறிக்கைகளில் மிக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நாட்டின் அரசாங்கமும் இது குறித்து உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறதா என்பது ஐயமே. இந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் அரசுத் துறைகளும் தேர்தல் திருவிழாவில் முழு மூச்சுடன் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த அறிக்கையில் உள்ள முதன்மையான தகவல்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு ஆள்வோருக்கு நேரமும் இராது, தேவையும் இராது என்பது வருத்தம் தருகிறது.

மேலும் படிக்க...»

 

நிலப் பறிப்பு - மனிதர் உணவை மனிதர் பறித்தல்


உணவுப் பற்றாக்குறை, பரவலான நிதிச் சிக்கல் ஆகிய இரண்டு பெருஞ் சிக்கல்களை உலகம் 2008-ஆம் ஆண்டு எதிர்கொண்டது: இவையிரண்டும் இணைந்து கவலையளிக்கும் புதிய போக்கு ஒன்றைத் தோற்றுவித்துள்ளன:

உலகில் ஒரு பகுதியில் நுகர்வதற்குத் தேவையான பண்டங்களை விளைவிப்பதற்காக வேறொரு பகுதியில் அடிமாட்டு விலைக்கு நிலத்தைப் பறித்தல். தனியார் நிறுவனங்களே இந்த நிலப் பறிப்பில் பெரும்பாலும் முன்னணியில் உள்ளன. எனினும் பல நாட்டு அரசுகளும் அவற்றுக்குத் துணை போகின்றன. அவர்களைப் பொருத்தவரை நிதி, உணவு, எரிபொருள் ஆகிய துறைகளில் நிலவும் உலகளாவிய சிக்கல்கள் கொழுத்த உபரி ஈட்டுவதற்கான நல்வாய்ப்புகள்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org