தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


இருவகை இந்தியர்கள்

ஈசாப்பின் பழைய கதை ஒன்று உண்டு. நரியும் கொக்கும் ஒன்றை ஒன்று விருந்துக்கு அழைப்பதும், நரி அகன்ற தட்டில் கூழைக் கொட்டி கொக்கைச் சாப்பிடச் சொல்வதும் பின் கொக்கு நரியை மறு விருந்துக்கு அழைத்து வாய் நீண்ட பாத்திரத்தில் கூழ் கொடுப்பதும்தான் அது. இதில் கொக்கையோ நரியையோ குறை சொல்வது சரியல்ல. இரண்டின் தேவைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, முரண்பட்டவை. நம் இந்திய நாட்டு மக்களை நாம் சற்று விலகி நின்று ஒரு விமரிசனப் பார்வையோடு நோக்கினால் நம்மிடையே இரு வகை மக்கள் இருப்பது தெரிய வரும். நகரத்தில் பிறந்து, வளர்ந்து, வெறும் காலால் மண்ணையே மிதித்தறியாத நகரத்து நரிகள் ஒரு புறம்; மண்ணும், மண் சார்ந்த தொழில்களும் வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமத்துக் கொக்குகள் இன்னொரு புறம். இதில் எண்ணிக்கையில் நரிகள் குறைவாயினும், வலுத்த இனம் அதுதான். ஆள்பவர்கள், திட்டமிடுவோர், நிர்வாகிகள், அதிகாரிகள், ஊடகப் பணியில் உள்ளோர், கல்வி, மருத்துவம், சட்டம்-ஒழுங்கு, நீதி போன்ற இன்றியமையாத துறையில் உள்ளோர் அனைவரும் நரிகளே. கொக்கிற்கும், நரிக்கும் உள்ள உண்மை வேற்றுமை ஆங்கிலப் புலைமையும், ஏட்டுக் கல்வியும், அதற்குச் சமூகத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள கவர்ச்சியான மரியாதையுமே. உண்மையான உழைப்பிலும் , உற்பத்தியிலும் ஈடுபடும் கொக்குகள் எவ்வித மரியாதையும் இன்றித் தங்கள் குஞ்சுகளை எல்லாம் நரிகளாக மாற்றத் துடிக்கின்றன.

மேலும் படிக்க...»

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


வளம்படுத்தும் கொள்கைகள்

சென்ற இதழில் இடைப்பட்ட தொழில்நுட்பம் பற்றிப் பேசுவதாகப் புறப்பட்டோம். அதற்கு முன் ஏன் பொருளாதாரக் கொள்கை சூழல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று காண்போம். பொருளாதாரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முற்படுமுன், பணம் என்பதற்கும் செல்வம் அல்லது வளம் என்பதற்கும் உள்ள வேற்றுமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை

என்றார் வள்ளுவர்.

“பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும் ” என்று மு.வரதராசனார் இக்குறளுக்கு விளக்கம் அளிக்கிறார். ஆகப் பொருளுக்கும் வளத்துக்கும் வேறுபாடு உள்ளது என்று தெளிவாகிறது. வளம் (குறிப்பாக இயற்கை வளம் மற்றும் மனித மன வளம்) என்பது அடிப்படையான செல்வம். வேறு ஒரு குறளில் வள்ளுவர் “நாடென்ப நாடா வளத்தன ”, என்று தேடாமலே இயல்பாக வளம் உள்ள நாடே நல்ல நாடு என்கிறார். அவ்வகையில் பார்த்தால் உலகில் மிகப் பெரிய வளங்களை உடைய நாடுகள் “மூன்றாம் உலகம்” என்று சொல்லப் படும் ஏழை நாடுகளே.

மேலும் படிக்க...»

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org