தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


ஆண் கருஞ்சிட்டு
படம் உதவி: ராம்கி சீனிவாசன்

simpley face

Indian Robin (Saxicoloides Fulicata)

தோற்றம்

குருவி அளவு தான் இருக்கும். ஆண்கள் கருப்பு நிறத்திலும், சிறகுகளில் வெள்ளை இழைகள் மற்றும் வால் அடியில் சிகப்பு நிறத்திலும் இருக்கும். கருப்பு நிறம் மிகவும் பளபளப்பாக அமைந்து இருக்கும். பெண்கள் சாம்பல் / பழுப்பு நிறத்தில் இருக்கும். இருவருக்கும் சற்று வால் தூக்கியே அமைந்திருக்கும்.

காணும் இடம்

இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய இடங்களில் காணலாம். மக்கள் அதிகம் வாழும் இடங்களில் இவற்றை காணலாம். நகரம், கிராமம், பூங்கா, வயல்கள் என்று எல்லா இடங்களிலும் இவற்றைக் காணலாம். இந்திய பறவையியல் கழகத்தில் பி.ராஜசேகர் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில், ஒரு ஆண் பறவையின் ஆட்சி எல்லை சுமார் ஒன்றேகால் காணி (6650 ச. மீ) என்று குறிப்பிட்டுள்ளார். அதிக இடங்களைச் சுற்றிப் பார்க்கும் பழக்கம் இதற்கு இல்லை போல.

முழுக் கட்டுரை »

செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


வரகரிசி சுரை அடை

தேவையான பொருட்கள்

1.வரகரிசி - 2 1/2 கோப்பை

2.பாசி பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு (மூன்றும் சேர்த்து) - 1 கோப்பை

3.வரமிளகாய் - 12

4.சோம்பு 1 தேக்கரண்டி

5.துருவிய சுரைக்காய் - 1 (சுமார் 2 கோப்பை வரும்)

முழுக் கட்டுரை »

ஆதிரங்கம் நெல் திருவிழா - அனந்து


'நமது நெல்லைக்காப்போம்' மற்றும் 'க்ரியேட்' சேர்ந்து நடத்தும் நெல் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் தன் வீச்சையும் ஆழத்தையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2006ல் 16 நெல் ரகங்கள் 400 விவசாயிகளிடம் பகிர்ந்தளிகப்பட்டது. அது மேலும் மேலும் வளர்ந்து 2014ல் 137 ரகங்களுடன் 3800 விவசாயிகளை எட்டியது. இந்த ஆண்டு 5000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து பல தரப்பட்ட விதைகளை பெற்றனர். நமது பாரம்பரிய விதைக் காப்பும், பெருக்கமும் மிகச் சிறப்பாக‌ நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது பெரிதாகிக்கொண்டே செல்கிறது. விவசாயிகள் தாங்கள் பெற்ற நெல் விதையை அடுத்த முறை இருமடங்காகக் கொண்டு வந்து கொடுக்கின்றனர் . 25000 விவசாயிகளை இன்று வரை அடைந்துள்ள இந்த விதை திருவிழா, பலரையும் இயற்கை விவசாயத்திற்கும், பாரம்பரிய ரகங்களுக்கும் ஈர்த்திருக்கிறது. விதைகளை, அதுவும் பாரம்பரிய விதைகளை நமது விவசாயிகளின் கைக்கே கொண்டு செல்வதில் க்ரியேட் அமைப்பின் 'நெல்' ஜெயராமனின் பங்கு அளவிட முடியாதது.

மிதி வண்டியில் ஊர் ஊராகச் சென்று பாரம்பரிய விதைகளை ஒவ்வொன்றாக சேகரித்த ஜெயராமன், இன்று இதே போன்று விதைத் திருவிழாக்கள் நாடெங்கிலும் பரவுவதில் முக்கிய காரணமாகத் திகழ்கிறார். தமிழகத்திலும் 10 இடங்களில் இன்று விதை விழாக்களும், பரிமாற்றமும் நடக்கின்றன‌. 2013 முதல் தமிழக அரசு வேளாண் துறையினரும், வேளாண் பல்கலைகழகமும் பங்கேற்கின்றனர். இதனால் மேலும் பல விவசாயிகளை இவை சென்றடையும்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org