தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடையிலாததோர் கூடு - பயணி

உணவு, உடை, இருக்கை (இருப்பிடம்), ஒழுகலாறு (வாழ்முறை) ஆகியவற்றை அடிப்படைத் தேவைகளாகக் கூறுகிறது சங்கத் தமிழ். விடுதலையைப் பற்றி எழுதிய நம் மீசைக்கவி பாரதியும், விட்டு விடுதலையாகி நிற்பாய் என்று தேவைகளை வரிசையிடும்போது “பீடையிலாததோர் கூடு கட்டிக் கொண்டு” என்கிறான். பீடைகள் எவையெல்லாம் என்று ஜெய்சங்கர் தன் வீடு கட்டிய அனுபவத்தை எழுதும் பொழுது விவரித்திருந்தார். கம்பி, சிமென்ட், கான்கிரீட், ஆற்றுமணல் போன்றவை பெரும் சூழல்சுவடைத் தம் உற்பத்தியிலும், வினியோகத்திலும் உள்ளடக்கி இருப்பதால் அவற்றைத் தவிர்த்து எவ்வாறு வீடு கட்டுவது என்ற தேடலின் விளைவுதான் பீடையிலாததோர் கூடு. சூழல்சுவடைப் பற்றிக் கவலைப் படாத சுயநலவாதிகளாக இருப்பினும், வீடு என்பது அவரவர் தேவையையும், பணவலுவையும் பொறுத்தது எனினும், ஒரே அளவு வசதிகளுக்கு மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாகச் செலவழிப்பது அறியாமையினால் அல்லது வறட்டுக் கவுரவத்தினால் மட்டுமே. இயற்கை அழிவைக் குறைக்கும் கட்டிடத் தொழில்நுட்பங்களைக் குறிப்பெடுப்பதும், அவ்வாறு பீடையிலாத கூடு கட்டி வாழும் விடுதலைக் குருவிகளின் அனுபவங்களைப் பதிவு செய்வதும் தற்சார்பு வாழ்வியல் இதழான தாளாண்மையின் பணிகளில் ஒன்று.

அவ்வரிசையில் முதலில் நாம் காண்பது கற்பகம் ஸ்ரீராம் தம்பதியினரின் எளிய, ஆனால் மிகுந்த நளினத்துடன், எல்லா வசதிகளும் கொண்ட இனிய‌ வீடு. [கற்பகம், ஸ்ரீராம் இருவரும் மும்பையில் பெரு நிறுவனங்களில் பணி புரிந்தவர்கள். நகர வாழ்க்கையின் வன்முறையும், சுரண்டலும் பிடிக்காமல் பொருள்செறிந்த வாழ்வைத் தேடிக் கிராமம் (மதுராந்தகம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள‌ உழவெட்டி) நோக்கிப் பெயர்ந்தவர்கள். இவர்கள் சிந்தனைகளும், செயல்களும், வாழ்க்கையில் எடுத்துள்ள முடிவுகளும் மிகுந்த வியப்பையும், நம்பிக்கையையும் ஊட்டுபவை. இவர்களைப் பற்றி நாம் அடுத்த இதழில் "நம்மிடையே உள்ள நாயகர்கள்" தொடரில் காண்போம்.]

மேலும் படிக்க...»

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்

[பல வருடங்களுக்கு முன்னர் நாம் கெடு முன் கிராமம் சேர் என்ற கட்டுரைத் தொடரில் நகரத்தில் இருந்து கிராமம் பெயர்ந்து நிலத்துடனும், இயற்கையுடனும் வாழும் வாழ்முறையே சிறந்தது என்று எழுதியிருந்தோம். அவ்வாறு காணி நிலம் போதும் என்று வாழ்பவர்களைக் காணி நாயகர்கள் என்றும் சிறப்பாகக் கூறியிருந்தோம். மேலை நாடுகளில் 2% மக்களே வேளாண்மையில் ஈடுபடும் மையப் பொருளாதாரச் சூழலில் காலின் டட்ஜ், வெண்டல் பெர்ரி போன்ற மாற்றுச் சிந்தனையாளர்கள் இதே கருத்தை தத்தம் அனுபவத்தில் இருந்து கண்டறிந்து கிராம வாழ்வும், வேளாண்மை சார்ந்த வாழ்வுமே சமூக நலனிற்கு உகந்தது என்று தெளிவாய் எழுதியிருக்கின்றனர்.

எனினும் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் தான் ஏளனத்திற்கு உள்ளாய் விடுவோமோ என்ற அச்சத்தாலேயே, ஆட்டு மந்தை போல் பெரும்பாலான மக்கள் நகரம் சார்ந்த வாழ்வைத் தேடுகின்றனர். இவ்வறிவற்ற மந்தைப் போக்கில் ஆங்காங்கே சில தெளிந்த அறிவாளிகள், தற்சார்பு வாழ்முறையைத் தேடுவதும், தற்சார்பு வேளாண்மையான இயற்கை வழி வேளாண்மையைத் தொழிலாகக் கொள்ளும் துணிவுடையவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வாறு மந்தையை விட்டுத் தனியத் துணியும் நாயகர்களைக் கண்டறிந்து வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவது, தற்சார்பு வாழ்வியல் இதழான தாளாண்மையின் கடமை.

மேலும் படிக்க...»

 

சென்னையில் விதைத் திருவிழா - அனந்து

சென்னையில் ஒரு விதைத் திருவிழா! விதை, விதை உரிமை மற்றும் விவசாயம் விவசாயிகளின் கையிலே மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகமெங்கும் மே 23 அன்று " மார்ச் அகைன்ஸ்ட் மொன்சான்டொ" என்னும் மொன்சான்டோவிற்கு எதிரான போராட்டம் 500க்கும் மேற் பட்ட நகரங்களில் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவிலும் பல நகரங்களில் நடந்தது, தமிழகத்தில் மதுரை, திருவாருர், சென்னை மற்றும் பாண்டியிலும் நடந்தது.

விவசாயத்தில் பெரும் கம்பனிக்களின் ஆதிக்கம் இருக்ககூடாது. அதன் ஒரு குறியீடாகவே பெரும் அரக்கக்கம்பனியான மொன்சான்டோவிற்கு அதிராக, விவசாயிகளின் உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் காத்திட இந்த போராட்டம் வருடாவருடம் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு சென்னையில் போராட்டமாக இல்லாமல், நம் பாரம்பரிய விதைகளை எடுத்துக்காட்டும் விதமாகவும், விதை பன்மையத்தை எடுத்துரிக்கவும் பாரம்பரிய விதைகளை கண்காட்சிக்கு வைத்து அவற்றை போற்றி பாதுகாத்து வரும் விவசாயிகளையும், விவசாயக்குழுக்களையும் கவுரவிக்கவும் இதனை " பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பினர்" நடத்தினர்.

பல வகையான பாரம்பரிய நெல் வகைகள், அவ்வரிசிகளின் குணம் மற்றும் பயன், காய் கறி விதைகள், பழ வகைகள், சிறு தானியங்கள், பருத்தி வகைகள் என பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

மேலும் படிக்க...»

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - பரிதி

(இது காலின் டட்சு எனும் உயிரியலாளர் 2005-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றின் சுருக்கப்பட்ட தமிழாக்கம். இது இறுதிப் பகுதி. அவருடைய இணையதள முகவரியும் ஆங்கில மூலக் கட்டுரைக்கான சுட்டியும் இந்தத் தமிழாக்கத்தின் இறுதியில் உள்ளன. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புகளுக்குள் தரப்பட்டுள்ளன. ) - பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

மக்கள்நாயகத்தின் இயல்பும் அதைச் செயல்படுத்துதலும்

பெருவாரியான மக்கள் இணக்கமானவர்களாகவும், அமைதியை விரும்புபவர்களாகவும், பிறருடன் கூட்டுறவு பாவித்து ஒத்துழைப்பவர்களாகவுந்தான் இருப்பார்கள் என்று ஊடாடு கருத்தியல் கட்டியங்கூறுகிறது. மக்களுடைய விருப்பங்களுக்கு முதன்மை தந்தால் - அதாவது, குமுகங்கள் உண்மையிலேயே மக்கள்நாயகத் தன்மையுடையனவாக இருந்தால் - குமுகங்கள் இப்போதைக்காட்டிலும் மிக நல்ல நிலையில் இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. ஆனால், அமைதியை நாடும் பெரும்பாலான மக்கள் அதிகாரத்தைத் தேடுவதில்லை. அந்த வேலையை ஒரு சில 'கெட்டிக்காரர்களுக்கு' விட்டுவிடுகின்றனர். அந்த ஒரு சிலர் தம்முடைய பேரவாக்களையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதற்கேற்பக் குமுகத்தை வழிநடத்துகிறார்கள். இப்படியாக, அமைதிப் புறாக்களின் அமைதித் தன்மையானது கெட்டிக்காரர்களின் ஆட்சிக்கு வழிவகுக்கிறது. இது குமுகத்தில் உள்ள முரண். இந்தச் சிக்கலை நாம் புரிந்துகொண்டால் அதிலிருந்து மீண்டு, உண்மையான மக்கள்நாயகம் உள்ள குமுகத்தைக் கட்டமைப்பது நம்மால் இயலாத ஒன்றல்ல.

மேலும் படிக்க...»

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org