தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே - ஜெயக்குமார்


முன்னுரை

சென்ற இதழில் 50 ஏக்கர் கொண்ட‌ பெரும் பண்ணையை எவ்வாறு பாரம்பரிய நெல் ரகங்களையும், இயற்கை வேளாண்மையும் கொண்டு லாபகரமாக மாற்றினார் என்று நண்பர் ஸ்ரீராம் பற்றி எழுதியிருந்தோம். இவ்விதழில் அவரின் நண்பரும் சக இயற்கை விவசாயியும் ஆன திரு. அசோகன் அவர்களின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான திட்டத்தை வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தோம். அதன் தொடர்ச்சியான கட்டுரை இது.

இக்கட்டுரையைப் பயன்படுத்துமுன் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்கள், சில அடிப்படை உண்மைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நம் காவிரிக் கடைமடைப் பாசனப் பகுதியில் நெல்லைத் தவிர பிற பயிர்கள் விளைப்பது கடினமே - எனினும் வீட்டுக் கொல்லையிலோ, அல்லது வயலிலேயே 50 குழி (16 1/2 சென்ட்) போன்ற ஒரு சிறு பகுதியைத் திடலாக்கி, நீர் தேங்காதவாறு வடிகால் வசதியுடன் வடிவமைத்துக் கொண்டு அதில் நம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் வீட்டுச் செலவைப் பெருமளவு குறைப்பதோடு மிகவும் ஆரோக்கியமான உணவையும் உண்ணலாம். செலவைக் குறைப்பதே ஒரு வருமானம் என்று உழவர்கள் சிந்திப்பதே இல்லை.

எடுத்துக்காட்டாக நெல் மட்டுமே விளைத்துப் பிற பொருட்களை விலை கொடுத்து வாங்கும் ஒரு விவசாயிக்கும், இயன்ற வரை தன் தேவைகளைத் தானே விளைத்துக் கொள்ளும் தற்சார்பு விவசாயிக்கும் ஒரு ஒப்பிடல் கீழுள்ள அட்டவணையில் உள்ளது. இதில் எண்கள் இடத்துக்கு இடம் மாறுபடலாம் ஆனால் கருத்து ஒன்றுதான்.

முழுக் கட்டுரை »

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


ஈரோடு மாவட்டத்தின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தின் உள்பகுதியில் அமைந்துள்ளது பூணாச்சி என்கிற சிறிய கிராமம். இது மேட்டூர் அணையில் இருந்து அந்தியூர் வழியாக சத்தியமங்கலம் செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இது மழை மறைவு பிரதேசமாக அமைந்துள்ளதால் இங்கு பூமி பெரும்பான்மையாக மானாவாரியாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இன்று வரையிலும் இதுவே தொடர்கிறது.

இந்த பூணாச்சியை ஒட்டியுள்ள சிறிய குடியிருப்பு கோணமூக்கனூர். இங்கு வசிக்கும் பாலு (எ) தேவநாராயணனுக்கு சுமார் 10 ஏக்கர் விவசாய பூமி சொந்தமாக உள்ளது. இவர் பரம்பரை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 1985 ஆம் வருடம் வரை இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கிடைத்த நீரைக்கொண்டு பல விதமான பயிர்களை பயிர் செய்துவந்துள்ளார். அதன் பின் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். இதற்கிடையில் இவரது அப்பா காலத்தில் இருந்து மாட்டை கட்டி எண்ணெய் எடுக்கும் செக்கு வைத்து சுற்று வட்டார மக்களுக்கு எண்ணெய் ஆட்டிக்கொடுத்துவந்துள்ளனர். பின்னர் அதில் மின்மோட்டாரை பொருத்தி பயன்படுத்திவந்துள்ளனர். 1980 வாக்கில் அந்தப்பகுதியில் பல பெரிய எண்ணெய் மில்கள் அமைக்கப்பட்டதால் சிறிய மரச்செக்கின் தேவை படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் அதையும் சுத்தமாக நிறுத்த வேண்டியதாயிற்று. இவர்கள் அந்த செக்கை சொந்தமாக பயன்படுத்தி எண்ணை எடுத்து விற்க முயன்ற போது கலப்பட எண்ணெய்களுடன் போட்டி போட முடியாமல் அதுவும் தடைபட்டது. மரச்செக்கு இன்று வரையிலும் முற்றிலும் ஓட்டமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org