தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


இடிப்பாரை ஒடுக்கும் மன்னர்கள்

உலகிலேயே பெரிய ஜனநாயகம் என்று நம்நாடு மார் தட்டிக் கொள்கிறது. ஒரு அரசியல் பார்வையாளார், பல வருடங்களுக்கு முன், ” பெரும்பாலான மக்களுக்கு எழுத்தறிவு இல்லாத நாட்டில், எழுத்து வடிவில் ஒரு அரசியல் சாசனம் காலத்திற்கு முற்பட்டதே” என்று பாதி நகைச்சுவையொடும், மிகுந்த வேதனையோடும் எழுதியிருந்தார். ஒபாமா முதன்முறை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப் பட்டபோது, அமெரிக்காவில் 1% பேருக்குக் கூட ஒபாமா யார் என்று தெரியாது. 6 மாதங்களுக்குள் பெரும் செலவில், தொலைக்காட்சிப் பெட்டிகள் அவரின் முகத்தை எல்லா வீடுகளிலும் தொடர்ந்து காட்டிக் காட்டி அவரை நாட்டையும், பொருளாதாரத்தையும் காப்பாற்றக் கூடிய தேவதூதன் போல் உருவகம் செய்தன. விளைவு: யாருக்குமே அறிமுகம் இல்லாத ஒரு மனிதர், உலகின் மிகப் பெரிய வல்லரசுக்குத் தலைவர் ஆனார். அமெரிக்காவை அனைத்திலும் காப்பியடிக்கத் துடிக்கும் நம் நாட்டில், பா.ஜ.கட்சி இதே முறையில் சுமார் 5000 கோடிகள் செலவு செய்து, ஒரு தனிமனிதரை முன்னிறுத்தி 6 மாதத்தில், நரேந்திர மோடியை ஊடக வலுவால் சந்தைப்படுத்தின. அவரும் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் ஆகி விட்டார்.

மேலும் படிக்க...»

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


சென்ற கட்டுரையில் நவீன பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள தவறுகளைப் பார்த்தோம். மையப் பொருளாதாரம், சென்ற இரு கட்டுரைகளில், புதிய பாரதத்தின் புதிய பொருளாதாரக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று மேலோட்டமாக ஆராய்ந்தோம். ஒவ்வொரு துறையிலும் ஒரு வரைபடம் போல, திட்டம் செல்ல வேண்டிய‌ திசையைச் சுட்டிக் காட்டினோம். வாசகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்; தாளாண்மை குறைகளை மட்டும் சொல்லவில்லை - விடைகளைத் தெளிவாக முன்வைக்கிறது. நவீன பொருளாதாரத்தின் நிலை என்ன: '69% மக்கள் நிலம் சார்ந்த தொழில்களில் உள்ளனர்; கிராமப் புறங்களில் உள்ளனர் - அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கும், வாழ்வாதாரத்திற்கும் என்ன வழி?' என்று கேட்டால் ,தற்போதைய பொருளாதார மேதைகள் கூறும் வழி 'அவர்கள் அனைவரையும் நகர‌த்தில் வேலை செய்ய அனுப்புங்கள்' என்பதே. 'அய்யா ஒரு வேலை உருவாக்க 10 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு தேவைப் படுகிறதே, 30 கோடி இளைஞர்களை எப்படி என்ன வேலைகளில் செலுத்துவீர்கள், அதற்கான முதலீட்டுக்கு எங்கே போவது' என்றால் அதற்கு ஏதும் பதில் இல்லை. 'ஒவ்வொரு தொழிற்சாலையும் ஏகப்பட்ட மெகாவாட் மின்சாரத்தைக் குடிக்கிறதே, இப்போது வீட்டு உபயோகத்திற்கே மின்பற்றாக் குறை உள்ள போது எப்படி இவ்வளவு தொழிற்சாலைகள் நிறுவுவது அதற்கான ஆற்றல் எங்கே? ' என்றால் அதற்கும் பதில் இல்லை. 'மேம்படுத்துதல் என்ற பெயரில் இருக்கும் விளைநிலங்களைத் தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்த்து விட்டால் உணவு உற்பத்திக்கு என்ன செய்வது?' என்றால் 'புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் தேவை' என்று பிரச்சினையை திசை திருப்பி வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வாணிபத்திற்கு வழிவகுக்கிறோம்.

மேலும் படிக்க...»

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org