தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடையிலாததோர் கூடு - பயணி

சூழல்சுவடு குறைவான, ஆனால் கான்க்ரீட் வீட்டைப் போன்ற நீடித்த ஆயுளும், அடிக்கடி செப்பனிடத் தேவையற்றதும் ஆன‌ வீடு ஒன்றைப் பற்றிச் சென்ற இதழில் (கற்பகம் ஸ்ரீராம்) பார்த்தோம். இவ்விதழில் அவர்களுக்கு அருகிலேயே, அச்சுமண் சுவர் (சுடாத செங்கல்) கொண்டு தன் வீட்டைக் கட்டி வரும் திரு.சித்தார்த் அவர்களைப் பற்றிக் காண்போம். இவர் ஏற்கனவே தாளாண்மையில் தமிழக ஏரிப்பாசனம் என்ற கட்டுரைத் தொடரை எழுதியவர். சித்தார்த் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்தவர். ஐ.ஐ.டியில் பி.டெக் அதன் பின் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்தவர். இப்பொழுது ஒழவெட்டிக் கிராமத்தில் 2 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார். காய்கறிகளை இயற்கையாக விளைத்து அதை அருகில் உள்ள கிராமங்களில் விற்று வருகிறார்!

இதற்கு முன், நாம் ஏற்கனவே லாரி பேக்கரின் MUD என்ற குறுநூலில் இருந்து தொகுத்தவற்றைச் சற்று நினைவு கொள்வோம்:

அச்சுமண் சுவர்

அச்சுமண் என்பது மண்தேர்வு செய்தபின் அதை ஒரு அச்சில் வார்த்துப் பின் வெயிலில் உலர்த்தி செங்கல்கள் போல் செய்து அவற்றை வைத்து வீடு கட்டுவது. இது மெக்சிகோ நாட்டில் பாரம்பரியமாக இருக்கும் தொழில்நுட்பம். இதனை அடோபி (adobe) என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இத்தொழில்நுட்பம் முன்பு செல்வந்தர்களின் வீடு கட்டப் பயன் படுத்தப் பட்டிருக்கிறது.” பச்சை மண் செங்கல்” என்றும் இதனை அழைப்பார்கள். இதில் இரண்டு மாடிக் கட்டிடங்கள் எளிதாய்க் கட்டலாம்"

மேலும் படிக்க...»

அறிவியலா, அழிவியலா? - பாமயன்

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரும் பின்வரும் வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டன, 'போர் இன்னும் முடியவில்லை, பூச்சிகளின் மீது போர் தொடரும்' போன்றவை பூச்சிகளை மனித குலத்தின் எதிரியாகச் சித்தரித்தன. இதேபோல களைகளையும் கொடுமையான எதிரிகளாகக் காட்டும்போக்கு பசுமைப் புரட்சியின் தொடர்ச்சியாக ஏற்பட்டது. கடந்த மார்ச் (2015) மாதம் தேசங்களிடை புற்றுநோய் ஆராய்ச்சி முகமை (International Agency for Research on Cancer (IARC) ) வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவல் உழவர்களை மட்டுமல்லாது, நுகர்வோரையும் பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

"பூச்சிக்கொல்லிகள்தாம் உயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பவை, களைக்கொல்லிகள் அல்ல. அதை ஒருவிதையிலைத் தாவரங்களை அல்லது இருவிதையிலைத் தாவரங்கள் என்று குறிப்பிட்ட தாவரங்களை மட்டுமே கொல்லக் கூடியவை. அவற்றால் பாலூட்டிகளுக்கு எந்தத் தீங்கும் இல்லை" என்று உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சூழலியல் பாதுகாவலர்கள் இவற்றை தொடக்கம் முதலே எதிர்த்து வந்தனர். குறிப்பாக களைக்கொல்லிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைக் கொல்லும் தன்மை கொண்டவை மட்டுமல்லாது இயற்கையில் உள்ள சாதாரணக் களைகள் வலுவான களைகளாக (super weeds) மாறிவிடும் தன்மை கொண்டவை என்றும் கூறினர். இதைத் தொடர்ந்து மறுத்துவந்த பெருங்கும்பணிகளோ தங்களது களைக் கொல்லிகளைச் சந்தையில் விற்றுவந்தன.

ஆனால் கடந்த மார்ச் மாதம் 20ஆம் நாள், உலக உடல்நல நிறுவனத்தின்((WHO)) ஒரு பிரிவான தேசங்களிடை புற்றுநோய் ஆராய்ச்சி முகமை கிளைஃபோசேட் என்று அழைக்கப்படும் பாபனோ மித்தைல் கிளைசின் என்ற களைக்கொல்லி புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது என்று அறிவித்தது. இந்த களைக்கொல்லி மான்சாண்டோ நிறுவனத்தால் 'ரவுண்டப் ரெடி' என்ற வணிகப் பெயரில் சந்தையில் விற்கப்படுகிறது. தே.பு.ஆ.மு. (IARC) ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் மதிப்பு மிக்க அமைப்பாகும். இதன் பெருமை உலக அளவில் சிறப்பிற்குரியது.

மேலும் படிக்க...»

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org