சரஸ்வதி - ஒரு நதியின் மறைவு என்ற நூலை அண்மையில் வாசித்தேன். ஒரு நதி மறையுமா? எவ்வாறு அது சாத்தியம்? அது ஒரு திடீர் நிகழ்வா அல்லது தொடர்ந்த ஒன்றா? என்ற கேள்விகளாலும், வேதங்களில் மிக உயர்த்தி சொல்லப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியின் மறைவைப்பற்றியது என்பதாலும் நான் அந்நூல் நோக்கி ஈர்க்கப்பட்டேன் என்பதே உண்மை. மிஷல் தநினோ என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ஒருவரின் கடும் முயற்சியால் விளைந்த நூல் இது. இந்நூல் எவ்வாறு சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதி நாகரிகம் என்பதையும் அது எவ்வாறு ஹரப்பாவிலுருந்து மேற்கே குஜராதின் கட்ச் வளைகுடா (Rann of Kutch) என்பதையும் பின்னானில் எவ்வாறு அது கங்கை சமவெளியை நோக்கி நகர்ந்தது என்பதையும் ஏராளமான வரைபடங்களுடனும் வரலாற்று சான்றுகளுடனும் தெளிவாக விளக்குகிறது. வியப்பூட்டும் வகையில் நம் மரபு சார்ந்த விவசாயம் எவ்வாறு 5000 ஆண்டு தொடர்புடையது என்பதையும் இந்தியாவில் இன்றும் வழக்கில் உள்ள வாழ்வியல் முறைகள் எவ்வாறு சரஸ்வதி நதி சார்ந்த நாகரிகத்தின் தொடர்ச்சியே என்பதையும் தெளிவாக்குகிறது. ஆரிய படையெடுப்பு என்பதே ஒரு மாயை என்பதும் அது மேலை நாட் டு ஆராய்ச்சியாளர்களின் 'கண்டுபிடிப்பு' என்பதையும் தெள்ளதெளிவாக விளக்குகிறது. இன்று கூட ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் 40/50 அடி ஆழம் தோண்டினால் நன்னீர் கிடைப்பது புதையுண்ட சரஸ்வதி நதியில் இருந்துதானாம்!
- 01. தலையங்கம்
- 02. ஆழ்ந்தகன்ற நுண்ணியர்கள் - பரிதி
- 03. உணவும் உரிமையும் - சரா
- 04. விலை போன விதைகள் - பாமயன்
- 05. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் -சகி
- 06. அடிசில் பார்வை - அனந்து
- 07. மாடல்ல மற்றயவை - ஜெய்சங்கர்
- 08. நிரம்பிய நூல் - பாபுஜி
- 09. BRAI meet - அனந்து
- 10. செவிக்கு உணவு இல்லாத போது - Sri
- 11. புதிய புலவர்கள் - பாபுஜி
- 12. தற்சார்பு வாழ்வியல் - சாட்சி
- 13. வாசகர் குரல்
- 14. குமரப்பாவிடம் கேட்போம்

