ஆழ்ந்தகன்ற நுண்ணியர்கள் - பரிதி
வரைமுறையற்ற பன்முக நுகர்வு, அதைத் தூண்டும் முதலீட்டியம் ('முதலாளித்துவம்'), இவற்றின் விளைவான சூழல் மாசு, அதன் விளைவாகப் புவி சூடேறுதல், அதனால் பருவ நிலை தாறுமாறாக மாறுதல் ஆகியன ஒரு புறம். மறுபுறம் முதலீட்டியத்திற்குத் தொண்டு செய்வதற்கென்றே உள்ள ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகக் கரும்பு முதலிய நீர்த் தேவை மிக்க பயிர்களைப் பயிரிட வேண்டிய கட்டாயத்துக்குள் உழவர்கள் வாழ்தல். இச்செயல்கள் நம் பூமித் தாயின் வற்றாத ஊற்றுகளைக் கடந்த சில பத்தாண்டுகளில் வற்றச் செய்துவிட்டன. இந்தக் கொடுஞ்செயலில் தம்மை அறியாமல் ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒரு தொழில்துறையைச் சார்ந்தோரைக் குறித்த கட்டுரை இது. இக்கட்டுரை இந்து ஆங்கில நாளேட்டின் 2013 சூலை 28 பதிப்பில் திரு பா. சாய்நாத் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கம். [மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புகளில் உள்ளன.] மொழிபெயர்ப்பாளர்: பரிதி (thiru.ramakrishnan@gmail.com) 2044 கடகம் (ஆடி) 16 / 2013 ஆகத்து 01
